நாளை வெளியாகிறது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொது ✍தேர்வு முடிவுகள் நாளை (மே 19) காலை 10 மணியளவில் வெளியாகவுள்ளது. இதனை அறிந்து கொள்ள இணையதளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.tnresults.ni.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படும் தகவல் அறியும் மையம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS