உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் நிறுத்தப்படுகிறது
உலகப்புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
157 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கடிகாரம் பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட காலம் நிறுத்தப்படுவது.இதுவே முதன்முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் எலிசபெத் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக்பென் கடிகாரம் உலகப்புகழ் பெற்றது.
தற்போது எலிசபெத் கோபுரம் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள பிக்பென் கடிகாரத்தை சீரமைக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், இதற்காக குறைந்தபட்சம் 29 மில்லியன் பவுண்டு முதல் அதிகபட்சம் 42 மில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்று கூறப்படுகிறது.
COMMENTS