முழு துறவறமும் வீணாகிப்போனது.
ஒரு ஜென்குரு மரணிக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரைஅருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒருபோதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.
“இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு
வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்ததலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார்.
ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார்.
அந்த குரு கிராமத்துக்கு
வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம்
இரு காவிஆடைகள் இருந்தன அதை அங்கிருந்த எலிகள் கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை
என்னுடைய ஆடையை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.
ஒருவர், “அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.
அந்த குரு, “சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.
பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன.பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக்கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது.
அந்த குரு திரும்பவும் வந்து, “இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு இருக்கிறது. அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார்.
அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர
வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.
அவர் பசுவை வாங்கிக் கொண்டு சென்றார். அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை
பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச்சென்றார்.
மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள்
ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு
பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.
அதனால் அந்த குரு, விதை விதைத்து
வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது.
ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார்.
“பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.
மக்கள், “ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, பூனையை,உங்கள்
உணவை, எல்லாவற்றையும் பராமரித்து கொள்வாள். என்றனர்.
ஆனால்! நான் ஒரு துறவி. என்றார்.
அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு
அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள்.
நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள்.இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.
அவர், “அப்படியானால் சரி, எனது குரு திருமணம் செய்து
கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இது போலித்திருமணம்
என்று ஒத்துக் கொண்டார். அவளை மணந்து அழைத்து சென்றார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு பணிவிடை செய்தாள்.
மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். இருவரும் காதல்வசப்பட்டு அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது.
அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.
வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம், “அதிலிருந்து உங்களது பாதையில்ஒவ்வொருகுருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது
வழக்கமாகிப் போனது.
பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்
.
COMMENTS